பஞ்சாபில் பயங்கரம்: பட்டப்பகலில் சிவசேனா தலைவர் சுதிர் சூரி சுட்டுக்கொலை!

பஞ்சாப் மாநிலம்
அமிர்தசரஸில் உள்ள கோவிலுக்கு வெளியில் நடந்த போராட்டத்தின் போது சிவசேனா தலைவர் சுதிர் சூரி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் ஒரு கோவிலின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. கோவில் வளாகத்துக்கு வெளியே குப்பையில் உடைக்கப்பட்ட சிலைகள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து சிவசேனா போராட்டம் நடத்தியது.

இந்நிலையில் இன்று அமிர்தசரசில் உள்ள கோவிலுக்கு வெளியே சிவசேனா தலைவர் சுதிர் சூரி தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. அப்போது அங்கிருந்த மர்ம நபர் ஒருவர், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுதிர் சூரியை நோக்கி பல முறை சுட்டனர். இதில், இரண்டு குண்டுகள் அவர் மீது பாய்ந்தன. இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சுதிர் சூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதை அடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை அதிரடியாக கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் சீக்கியர்களின் புனித நகரத்தில் வசிப்பவர்களிடையே பதற்றமான செய்திகள் பரிமாறப்படுவதால், மக்கள் அமைதி காக்கும்படி மாவட்ட காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.