பொலிஸ் உத்தியோகத்தரின் கொலை தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை

கெப்பட்டிகொல்லாவ சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர், தலையில் அடிபட்டு மூளை மற்றும் மண்டையோடு சேதமடைந்ததன் காரணத்தினாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.

போராட்டத்தின் போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் பிரேத பரிசோதனையை அனுராதபுர வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரி மெற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 31ஆம் திகதி பொலிஸ் உத்தியோகத்தர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இதுவரை 16 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்களில் ஒருவர் இந்த கொலை சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபடவில்லை என்பது தெரியவந்ததையடுத்து அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் 14 பேர் கெப்பட்டிகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களில் 13 பேர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மற்றைய சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்காக 48 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மற்றுமொரு சந்தேகநபர் தற்போது கெப்பட்டிகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.