ஜார்கண்டில் காங். எம்எல்ஏக்கள் வீடுகளில் ஐடி ரெய்டு

ராஞ்சி: ஜார்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியையும், குறிப்பாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனையும் குறிவைத்து அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளில் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், அங்கு ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ.க்களும் தற்போது குறிவைக்கப்பட்டுள்ளனர். காங்கிரசை சேர்ந்த குமார் ஜெய்மங்கல், பிரதீப் யாதவ் ஆகியோருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில், ஜார்கண்டில் ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மேற்கு வங்கத்தில் பணம் பெற்றதாக எம்எல்ஏ ஜெய்மங்கல் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், அந்த 3 எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு பழிவாங்கும் வகையிலேயே, அவரை பாஜ குறிவைப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.