10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ்…

சென்னை: தமிழ்நாட்டில், 10, 11, 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணையை, பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதன்படி,  12வது பொதுத் தேர்வு தேதி 2023ம் ஆண்டு மார்ச் 13ந்தேரி தொடங்கி ஏப்ரல் 3ந்தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு நேரம் காலை  10 மணி முதல் மதியம் 01.15 மணி வரை என தெரிவிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று பிற்பகல்   தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை அவர் வெளியிட்டார்.

அதன்படி, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்கும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏ ப்ரல் மாதம் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை, 8.80 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் மாதம் 14 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி முடிவடைகிறது. இந்தத் தேர்வை 8.50 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வினாத்தாள் முறையில் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்ட முறை பின்பற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.