டெல்லி: தமிழ்நாட்டில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காரணமாக தற்போது பல்வேறு இடங்களில் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. எனினும் வட மாவட்டங்களில் மழை குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக்க வாய்ப்பு உள்ளது.
காற்றழுத்தம் தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இது வரும் 11ம் தேதிக்குள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும். தற்போதைய சூழலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதியின் தீவிரம் குறித்து கணிக்க இயலாது. தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழைக்கும், நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவும் கூறியுள்ளது.