நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 6 பேர் உயிரிழந்தனர். ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
முன்னதாக நேற்று மாலை நேபாளத்தில் உள்ள டோத்தி மாவட்டத்தில் 4 புள்ளி 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. வீடுகள் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. டெல்லி, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் வடமாநிலங்களில் கட்டடங்கள் குலுங்கின.சில இடங்களில் மக்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.