Tirupati: ரூ.300 தரிசன டிக்கெட்; தேவஸ்தானம் சூப்பர் நியூஸ்!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு உள்ளூர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது.

இவ்வாறு வரும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் இலவச டோக்கன் மற்றும் ரூ.300 கட்டண டோக்கன் வழங்கி தரிசனத்துக்கு அனுமதித்து வருகிறது.

இந்த இலவச டோக்கன் மற்றும் ரூ. 300 கட்டண தரிசன டோக்கன்கள் திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் சார்பில், மாதந்தோறும் ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகிறது.

அந்தவகையில் டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்கள் வருகிற 11ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதள பக்கத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாள்தோறும் 35 ஆயிரம் டிக்கெட் வீதம் டிசம்பர் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in/#/login என்கின்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் 27ம் தேதி காலை 10 மணிக்கு அதே இணைய தளம் மூலம் திருமலையில் தங்கும் அறைக்கு முன்பதிவு செய்துகொள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.

இந்த தரிசன டிக்கெட்டுகள் முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். பக்தர்கள் இதை கருத்தில் கொண்டு அந்தந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்றும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.