உ.பி: கோயிலுக்குச் சென்ற கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை; சாமியாருக்கு ஆயுள் தண்டனை!

உத்தரப்பிரதேச மாநிலத்தில், கோயிலுக்குச் சென்ற கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமைசெய்த சாமியாருக்கு, உள்ளூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.

பாலியல் வன்கொடுமை

இது தொடர்பான வழக்கு மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சோட்டலால் யாதவ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் விசாரணையின்போது அரசு தரப்பு வக்கீல் ராஜீவ் சர்மா, “2016-ம் ஆண்டு, இரண்டாமாண்டு கல்லூரி மாணவி உள்ளூர் கோயிலுக்குப் பூஜை செய்யச் சென்றபோது கடத்தப்பட்டார். அதன்பின்னர் இது சம்பந்தமாக கோயில் பூசாரி பிரேம்சந்த் கோஸ்வாமி மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்ததையடுத்து, நான்கு மாதங்களுக்குப் பிறகு மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியாருக்கு ஆயுள்தண்டனை!

இதற்கிடைப்பட்ட காலத்தில், சாமியார் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக, போலீஸிடம் மாணவி தெரிவித்திருக்கிறார். மேலும், சாமியாரும் தன் மறைவிடத்தையும் மாற்றிக்கொண்டே இருந்தார்” என நீதிமன்றத்தில் தெரிவித்தார். விசாரணையைத் தொடர்ந்து போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் பிரேம்சந்த் கோஸ்வாமி குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, ரூ.25,000 அபராதத்தொகையுடன் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.