டெல்லி மாசுபாடு: "எல்லா விஷயங்களிலும் நீதிமன்றங்கள் நுழைய முடியாது!" – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

டெல்லியில் அதிகரித்துவரும் காற்று மாசுபாடு, கடந்த சிலவரங்களாகவே பெரும் விவாதப்பொருளாகியிருகிறது. இது தொடர்பாக ஆளுங்கட்சியான ஆம் ஆத்மியை பா.ஜ.க கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் டெல்லி காற்று மாசுபாடு குறித்த அவசர விசாரணைக்கான மனுவை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இன்று நிராகரித்திருக்கிறார்.

டெல்லி காற்று மாசுபாடு

மேலும் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அதன்மீது கேள்வியெழுப்பி தன் கருத்தையும் முன்வைத்திருக்கிறார். அதில், “இந்தப் பிரச்னையைத் தீர்க்க நாம் எல்லாவற்றையும் தடைசெய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா… எல்லாவற்றையும் நிறுத்தவேண்டுமா? நீதித்துறை தரப்பில் எடுக்கக்கூடிய வழக்குகளை நாங்கள் கையாள வேண்டும்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

அதுமட்டுமல்லாமல், எல்லா விஷயங்களிலும் நீதிமன்றங்கள் நுழைய முடியாது. எனவே நாங்கள் அதை விரைவில் விசாரிக்கப்போவதில்லை. அதற்கான நேரத்தில் அது வரட்டும்” என்று நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியிருக்கிறார்.

முன்னதாக கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஓய்வுபெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், டெல்லி மாசுபாடு குறித்த அவசர விசாரணை கோரிய மனுவை, விசாரணைக்குப் பட்டியலிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.