தூது விட்ட ஓபிஎஸ் – இபிஎஸ்.. ஓகே சொன்ன பிரதமர் மோடி; அதிரும் அதிமுக!

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க – ஆகியோருக்கு நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அதிமுகவில் 4 ஆண்டுகளுக்கு பிறகு, ஒற்றைத் தலைமை உருவாகி உள்ளது. ஜூலை 11 ஆம் தேதி, சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக, பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம்

தேர்வு செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த

மற்றும் அவரது ஆதரவாளர்கள், அதே நாளில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதனால் அதிருப்தி அடைந்த

, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்துள்ளார். எனினும் இதுவரை நடைபெற்ற சட்டப் போராட்டங்களில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருக்கிறது. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில், டெல்லி பாஜக மேலிடமும் மவுனம் காத்து வருகிறது.

இந்த பரபரப்பான அரசியல் நிகழ்வுகளுக்கு இடையே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள, நாளை பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகைத் தர உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க, ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நேரம் கேட்டிருந்தனர். இதற்கு தற்போது அனுமதி கிடைத்துள்ளது. ஆனால், இருவருக்கும் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச எவ்வளவு நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது என்ற தகவல் வெளியாகவில்லை. மேலும் இருவரும் எந்த இடத்தில் பிரதமர் மோடியை சந்திக்க இருக்கின்றனர் என்ற தகவலும் வெளியாகவில்லை.

பிரதமர் மோடி உடனான சந்திப்பின் போது, ஒட்டுமொத்த அதிமுகவும் தனது தலைமையில் இயங்குகிறது என்பதை காட்ட எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு போட்டியாக ஓ.பன்னீர்செல்வம் காய் நகர்த்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவில் அதிகார மோதல் வெடித்து விஸ்வரூபம் ஆகி உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் இந்த வருகை, அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடியின் ஆசி யாருக்கு கிடைக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.