தேசிய உற்பத்தித்திறன் போட்டி : அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு சிறப்பு பரிசு

தொழில் அமைச்சின் கீழ் இயங்குகின்ற தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால் கடந்த 2020ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் அரச நிறுவனங்களுக்கிடையிலான உற்பத்தி திறன் போட்டி நடைபெற்றது.

இதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முதன்முறையாக பங்கு பற்றி சிறப்பு பாராட்டு பரிசினை ( ( Special Commendation ) ) வென்றது.

இதற்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று ( 09.11.2022 ) மொனராகலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அகமது ஷாபிர்  கலந்து கொண்டு சிறப்பு பாராட்டு பரிசு ( Special Commendation )  சான்றிதழையும் பெற்றுக் கொண்டார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.