பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் அமைச்சரவையில் முதல் ராஜினாமா! – காரணம் என்ன?

ரிஷி சுனக் கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்றார். ரிஷி சுனக் பதவியேற்றதும், கவின் வில்லியம்சனை அமைச்சராக்கினார். கவின் பிரிட்டனின் பாதுகாப்புத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர். ஆனால், ரிஷிக்கு முன்னர் பிரதமராக இருந்தவர்கள், கவினை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினர். ரிஷி பதவியேற்ற பின், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கவின் வில்லியம்சனை மீண்டும் அமைச்சராக நியமித்தார்.

இந்நிலையில், அமைச்சரான கவின் வில்லியம்சன்மீது கன்சர்வேடிவ் கட்சியின் சக தலைவர்களே தொடர்ந்து முறைகேடு மற்றும் மிகக் கடுமையாக நடந்துகொள்வதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த நிலையில், அவர் தனது ராஜினாமா பற்றிய பதிவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ஆனால், தன்மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைக் கவின் மறுத்துள்ளார்.

இது குறித்து கவின், சக ஊழியர்களிடம் கடுமைக் காட்டியதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாகக் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை (8-11-22) ரிஷி சுனக், “நான் உங்கள் ராஜினாமா கடிதத்தை வருத்தத்துடன் ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் இந்த முடிவை எடுத்ததற்கான காரணம் எனக்குப் புரிகிறது. நீங்கள் அளித்த தனிப்பட்ட ஆதரவுக்கும் உங்கள் நேர்மைக்கும் நன்றி” என்று அதிகாரபூர்வமாகக் கடிதம் வெளியிட்டுள்ளார்.

ரிஷி சுனக்கின் அமைச்சரவையில் முதல் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்திருப்பவர் கவின் ஆவார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.