சபரிமலைக்கு செல்ல ஸ்பாட் புக்கிங் ஏற்பாடு| Dinamalar

சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு ‘ஆன்லைன்’ வாயிலான முன்பதிவு அவசியம். பதிவு செய்யாமல் வருவோருக்காக குமுளி உள்ளிட்ட ஐந்து இடங்களில் ‘ஸ்பாட் புக்கிங்’ வசதி செய்யப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைகள் வரும் 17ல் துவங்குகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலால் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில், தரிசனத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சபரிமலையில் அய்யப்பன் தரிசனத்திற்கு ஆன்லைன் வாயிலான முன்பதிவு அவசியம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இதையடுத்து, பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு குமுளி, 66ம் மைல், பந்தளம், எருமேலி, நிலக்கல் ஆகிய ஐந்து இடங்களில் ஸ்பாட் புக்கிங் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

‘இதற்கு பக்தர்கள் ‘பாஸ்போர்ட் சைஸ்’ போட்டோ, ஆதார் அட்டை ஆகியவைகளை மட்டும் எடுத்து வந்தால் போதுமானது’ என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

– நமது நிருபர் —

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.