காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை | Dinamalar

ஸ்ரீநகர், ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், ஒரு பயங்கரவாதி நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்மு – காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள கேப்ரியன் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது சுட்டனர்.

உடனடியாக பாதுகாப்பு படையினர் தந்த பதிலடியில் ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பைச் சேர்ந்த கம்ரான் பாய் என்ற பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

தேடுதல் வேட்டை தொடர்ந்து நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.