புதுடெல்லி: நேதாஜி பிறந்தநாளை பொது விடுமுறையாக அறிவிக்கக் கோரிய வழக்கு தொடர்ந்தவருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின் தாக்கல் செய்திருந்த பொதுநல மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் நீதிமன்ற வரம்புக்குள் வராது என்று தெரிந்தும், வழக்கறிஞர்கள் ஏன் இத்தகைய மனுக்களை தாக்கல் செய்கிறீர்கள். இது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயலாகும். குறிப்பாக பொதுநல மனுக்கள் என்பது அவசரம் மற்றும் மிக முக்கியத்துவம் வாய்ந்தமைக்காக பயன்படுத்தப்படுவதாகும்.
அதனை இதுபோன்று வேடிக்கை பொருளாக பயன்படுத்துவதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது’’ என கடும் கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட், அதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.