ரூ.200 கோடி மோசடி வழக்கு: பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஜாமின்!

பணப் பரிமாற்ற மோசடி வழக்கில், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு சிறப்பு நீதிமன்றம், ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், டெல்லி தொழிலதிபர்களின் குடும்பத்தினரை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். மோசடி செய்த பணத்தில், பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா பதேகி ஆகியோருக்கு சொகுசு கார்கள் உட்பட பல விலை உயர்ந்த பொருட்களை இவர் வாங்கிக் கொடுத்ததாக, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, அமலாக்கத் துறை மற்றும் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நடிகை ஜாக்குலினிடம் பல முறை விசாரணை நடத்தினர். அமலாக்கத் துறையினர் சமீபத்தில் தாக்கல் செய்த துணை குற்றப் பத்திரிகையில், ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றவாளியாக சேர்த்தனர்.

அமலாக்கத் துறை தாக்கல் செய்த துணை குற்றப் பத்திரிகையில், ஜாக்குலின் பெர்னாண்டசை குற்றவாளி என குறிப்பிடப்பட்டு இருந்தது. அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களிலும், ‘லுக் அவுட் நோட்டீஸ்’ வினியோகிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜாமின் கோரி, சிறப்பு நீதிமன்றத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மனு தாக்கல் செய்தார். ‘இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட

நிலையில் தன், ‘கஸ்டடி’ தேவையில்லை’ என, ஜாக்குலின் பெர்னாண்டஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இதை

ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிபதி, ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும், 2 லட்சம் ரூபாய் வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.