அரசுப் பேருந்தில் பயணித்த பிடிஆர்… அசந்து பார்த்த பொதுமக்கள்!

மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட எல்லீஸ் நகர் மற்றும் தத்தனேரி பகுதிகளில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இரண்டு புதிய பேருந்து வழிதடத்தை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து அரசு பேருந்தில் ஏறி சிறிது தூரம் பொதுமக்களுடன் அவர் பயணம் மேற்கொண்டார். அப்போது அவருடன் பேருந்தில் பயணித்து வந்த 50க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும், தனக்கும் சேர்த்து 510 ரூபாயை பேருந்து நடத்துனரிடம் கொடுத்து பேருந்து பயண டிக்கெட்களையும் அவர் வாங்கினார்.

மாநிலத்தின் நிதியமைச்சராக இருந்தாலும், அரசுப் பேருந்தில் தானும், கட்சிக்காரர்களும் மேற்கொண்ட பயணத்துக்கு டிக்கெட் வாங்கிய பிடிஆரை பேருந்தில் பயணித்த பொதுமக்கள் வியப்பாக பார்த்ததுடன் வெகுவாக பாராட்டவும் செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.