இதுக்கு இல்லியா சார் எண்டு..! – மீண்டும் மாடு மீது மோதிய 'வந்தே பாரத்' ரயில்!

வந்தே பாரத் விரைவு ரயில் அரக்கோணம் சந்திப்பு அருகே கன்றுக்குட்டி மீது மோதியதில் ரயிலின் முன்பக்கம் சேதம் அடைந்தது.

75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அடுத்த ஆண்டிற்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி ஒவ்வொரு பகுதிக்கும்
வந்தே பாரத் ரயில்
சேவை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முதற்கட்டமாக அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி குஜராத் – மகாராஷ்டிரா இடையே இயக்கப்பட்ட ரயிலில் எருமை மாடுகள் மோதியதில் 4 மாடுகள் உயிரிழந்தன. ரயிலின் கூம்பு வடிவ முகப்புப் பகுதியில் சேதம் ஏற்பட்டது. தொடர்ந்து அக்டோபர் 7 ஆம் தேதி அதே ரயிலில் பசு மாடு ஒன்று மோதியதில் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது. பசு மாடு மோதி ரயில் சேதம் அடைந்ததால் பசு மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து அக்டோபர் 8 ஆம் தேதி காலை 6 மணிக்கு டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலின் சக்கரம் திடீரென ‘ஜாம்’ ஆனது. இதனால் பயணிகள் 5 மணி நேரம் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல முடியாமல் தவித்தனர். கடந்த மாதம் 29 ஆம் தேதி மும்பை – காந்திநகர் வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மாடுகள் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.

இந்நிலையில், நேற்று இரவு மைசூரில் இருந்து சென்னை நோக்கி வந்த
வந்தே பாரத்
விரைவு ரயில் அரக்கோணம் சந்திப்பு அருகே கன்றுக்குட்டி மீது மோதியதில் ரயிலின் முன்பக்கம் லேசாக சேதமானது. ரயிலில் அடிபட்டு கிடந்த கன்றுக்குட்டியை ஊழியர்கள் அகற்றினர். சிறிது நேரம் நிறுத்தப்பட்ட ரயில், மீண்டும் சென்னை நோக்கி இயக்கப்பட்டது. இந்த ரயிலை கடந்த 11 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் இருந்து துவக்கி வைத்தார். வந்தே பாரத் ரயில் துவங்கப்பட்டு முதலிலிருந்து நான்காவது முறையாக விபத்துக்கு உள்ளாவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.