கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க நூதன நாடகம்; அம்பலப்பட்ட சுவாரஸ்யம்.!

இந்தோனேசியாவின் தெற்கு ஜகார்த்தாவில் உள்ள ஒரு தம்பதி, தங்களின் இறந்த குடும்ப உறுப்பினர் ஒருவினரின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஒன்றை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சவப்பெட்டியுடன் தங்கள் வீட்டிற்கு வருமாறு தெரிவித்துள்ளனர். அதையடுத்து ஆம்புலன்ஸ் வந்த பின்னர், தம்பதி ஆம்புலன்ஸில் ஏறியுள்ளனர்.

வாகனத்தில் ஏறும் போது தம்பதியினர் நலமாக இருந்ததை ஆம்புலன்ஸ் டிரைவர் கவனித்துள்ளார். ஆம்புலன்ஸ் ஒரு நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டு இருந்த போது, சிறிது நேரம் ஆம்புலன்ஸை நிறுத்துமாறு கூறிய அந்த தம்பதி, திடீரென ஒரு ஆண் நபரை சவப்பெட்டிக்குள் அனுப்பி இருக்க வைத்துள்ளனர். பின்னர் ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு சென்ற உடன், மருத்துவர்கள் சவப்பெட்டிக்குள் இருந்தவரை சோதனை செய்தனர். அப்போது இறந்தவர் போல் நடித்த அந்த நபர் எழுந்துள்ளார். இதை தம்பதியின் திட்டம் புரியாமல், அவர்களது உறவினர் ஒருவர் எதேச்சையாக வீடியோ எடுத்து உள்ளார்.

இறந்த தனது உறவினர் உயிர்பிழைத்துவிட்டார் என இணையத்தில் அந்த காட்சியை உறவினர் வெளியிட்டு விட்டார். இதனால் சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவைத் தொடர்ந்து, அந்த நபர் உயிரிழக்கவில்லை என அந்த மருத்துவமனை அறிக்கை அளித்துவிட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தாங்கள் வாங்கிய கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க அந்த தம்பதியினர் நாடகமாடியது வெளிச்சத்திற்கு வந்தது.

சீன அதிபர் கனடா பிரதமரை அச்சுறுத்தவில்லை; வைரல் வீடியோவிற்கு விளக்கம்.!

அதேபோல் மருத்துவர்கள் முன் சவப்பெட்டிக்குள் இறந்தவர் போல் நடித்து இறப்பு சான்றிதழ் வாங்கி விட தம்பதி திட்டமிட்டு நடித்துள்ளதும் தெரியவந்தது. ஆம்புலன்ஸிற்கு பணம் செலுத்தி, இறந்தவர் போல் நடித்து இறப்பு சான்றிதழ் வாங்க முயற்சி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதிகாரிகளை வேண்டுமென்றே ஏமாற்ற முயல்வது ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் குற்றமாகும். அந்தவகையில் தம்பதியினர் விசாரிக்கப்படுவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.