கல்லூரி பேராசிரியர்கள் ஷாக்; தமிழக அரசு திடீர் அதிரடி!

தமிழ்நாடு உயர்க் கல்வி துறை சார்பில் கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் உயர்க் கல்வி நிறுவன பதிவாளர்களுக்கு முக்கிய கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது.

அந்த கடிதத்தில் தமிழ்நாடு உயர்க் கல்வி துறை சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக மேலங்கி அணிந்திட வேண்டும். மேலும், பேராசிரியர்களுக்கு இடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிந்திட வேண்டும்.

அதுமட்டும் இல்லாமல் கல்லூரி பேராசிரியர்கள் இனி, தங்களுடைய உடல் அமைப்பை வெளியில் காட்டாதபடி மேலங்கியை அணிந்திட வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு அரசின் உயர்க்கல்வி துறை அறிவித்து இருப்பதால் பேராசிரியர்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.