தேனி அருகே சிறுத்தை தோல் பறிமுதல்

தேனி: தேனி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட சிறுத்தை தோல் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. தேனி வடபுதுப்பட்டி அருகே அம்மாபட்டியை சேர்ந்தவர் துரைப்பாண்டி (37). இவரது வீட்டில் சிறுத்தை  தோல் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி உதவி வனபாதுகாவலர் ஷர்மிலி தலைமையில் வனச்சரகர் செந்தில்குமார், வனவர் ஆனந்தபிரபு ஆகியோர் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

இதில் அங்கிருந்த சிறுத்தையின் தோல் ஒன்றை கைப்பற்றினர். துரைப்பாண்டி தலைமறைவானார். தேனி பகுதியில் வேட்டையாடிய சிறுத்தையின் தோலா அல்லது வெளியூரில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட தோலா என்பது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். தலைமறைவான துரைப்பாண்டியை தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.