நாளை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்..!!

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசின் கொள்கை, ஓய்வூதியம், மற்றும் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டும் பணி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 19-ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், நாடு முழுவதும் நவம்பர் 19-ம் தேதி வங்கி சேவைகள் பாதிக்கப்படும்.

நாடு தழுவிய வேலைநிறுத்தம் என்பதால் எந்த ஒரு வங்கியிலும் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யாவிட்டாலும் ரொக்க டெபாசிட், பணம் எடுப்பது, காசோலை எடுப்பது போன்ற பணிகள் தடைபடும். வேலை நிறுத்தத்தால் தனியார் வங்கிகள் பாதிக்கப்படாது.

வேலைநிறுத்தம் காரணமாக சேவைகள் பாதிக்கப்படலாம் என்று பாங்க் ஆஃப் பரோடா மற்றும் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்துள்ளன.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறுகையில், வங்கி கிளைகளில் எங்கு கூடுதல் ஊழியர்கள் உள்ளார்களோ அவர்களை ஊழியர் பற்றாக்குறை உள்ள வங்கி கிளைகளுக்கு மாற்ற வேண்டும். இதன் மூலம் அனைத்து கிளைகளிலும் சமமான ஊழியர்கள் இருப்பர். ஆனால், சில வங்கிகள் இந்த ஒப்பந்தத்தை மீறி ஊழியர்களை ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு பணியிட மாற்றம் செய்கிறது. ஒரு வங்கியில் 3 ஆயிரம் ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இது தொழிலாளர் சட்டத்தை மீறும் செயலாகும். சில வங்கிகள் பல்வேறு பணிகளுக்கு அயல்பணி நடவடிக்கை, பொதுமக்களிடம் வைப்புத்தொகை வசூலிக்கும் பணியில் ஈடுபட்ட 240 ஊழியர்களை பணி நீக்கம் செய்ததுடன் அவர்களுக்கான எவ்வித இழப்பீட்டையும் வழங்கவில்லை.இதற்கு தீர்வு காணும் வகையில் வேலைநிறுத்தம் செய்வதற்காக வங்கி ஊழியர் சங்கம் சார்பில் நோட்டிஸ் வழங்கப்பட்டதையடுத்து கடந்த 5-ந் தேதி மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பின்னர், 10-ந் தேதி டெல்லியில் தலைமை தொழிலாளர் நலத்துறை ஆணையருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், வங்கிகளின் நிர்வாக தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. இதற்கிடையே, தலைமை தொழிலாளர் நலத்துறை ஆணையரின் கோரிக்கையை ஏற்று நேற்று வங்கிககள் கூட்டமைப்புடன் மீண்டும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், ஏற்கனவே திட்டமிட்டப்படி நாளை 19-ந் தேதி நாடு தழுவிய அளவில் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.