16 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் உறவினர் உட்பட 5 பேர் கைது..!

திருச்சியில், 16 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேர் கைதான நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

முசிறி தாலுகாவைச் சேர்ந்த சிறுமியை அவரது உறவினர் ரங்கநாதன் மற்றும் 4 நண்பர்கள் குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து, கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவும் எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுமி தொடர்பான வீடியோ வாட்ஸ் அப்பில் வெளியானதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வழக்குப்பதிவு செய்த போலீசார், ரங்கநாதன், மணி மற்றும் தர்மா உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சரன், தினேஷ் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.