வங்கதேசம்: காதலியை துண்டு துண்டாக வெட்டி சாக்கடையில் வீசிய நபர்.!

டெல்லியில் அப்தாப் என்ற நபர், தனது 28 வயது காதலி ஷ்ரத்தா வாக்கர் என்பவரை 35 துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், அதேபோல் மற்றொரு சம்பவம் வங்கதேசத்தில் நடந்துள்ளது.

வங்காளதேச நாட்டை சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். திருமணம் ஆன இவர் தனது மனைவியுடன், கோபர்சக்கா சதுக்கம் பகுதியில் வசித்துவருகிறார். இதனிடையே கவிதா ராணி என்ற இந்து பெண்ணுடனும் அபுபக்கர் தொடர்பில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அபுபக்கருக்கு திருமணம் நடந்தது ராணிக்கு தெரியாது. மனைவி வேலைக்குச் செல்லும் நேரத்தில், அபுபக்கரும், ராணியும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

தேனியில் ஓபிஎஸ் அதிரடி ஆய்வு!

இந்த நிலையில், கடந்த ஐந்து நாட்களுக்கு முன் அபுபக்கருக்கு திருமணம் முடிந்து மனைவி இருப்பது ராணிக்கு தெரியவர, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அபுபக்கர், ராணியை தலையை துண்டித்து கொலை செய்து உள்ளார். மேலும் ராணியின் கை, கால்களை வெட்டி தலையையும் சேர்த்து பிளாஸ்டிக் பையில் போட்டு, சாக்கடையில் வீசி சென்றுள்ளார். வங்காளதேசத்தின் குல்னா மாவட்டத்தில் சோனாடங்கா பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இதையடுத்து போலீசார் அபுபக்கரை கைது செய்தனர்.

சீன அதிபர் கனடா பிரதமரை அச்சுறுத்தவில்லை; வைரல் வீடியோவிற்கு விளக்கம்.!

இந்த சம்பவத்தால் அங்கு இந்துக்களின் உயிர் துளியளவு மதிக்கப்படவில்லை என வங்க தேச இந்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து வங்காளதேச இந்துக்களுக்கான குரல் என்ற அமைப்பு தனது டிவிட்டர் பதிவில், வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து உள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளது. அதேபோல் நாவ்காவன் மாவட்ட நீதிபதி ஹசன் மஹ்முதுல் இஸ்லாம், தொடர்ந்து இந்துக்களை கொச்சைப்படுத்தி வருவதாகவும், ரங்பூரில் காளி கோயிலில் காளி சிலையை கிளர்ச்சியாளர்கள் சிலர் சேதப்படுத்தி உள்ளனர் என்றும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.