4 குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மாஸ்கோ: ரஷ்யாவின் அடுக்கு மாடிகுடியிருப்பில் நடந்த காஸ் கசிவு விபத்தில் சிக்கி 4 குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலியாகி உள்ளனர்.

latest tamil news

ரஷ்யாவின் தென்கிழக்கு பகுதியை சேர்ந்த ஷாக்லீன் தீவில் இச்சம்பவம் நடைபெற்று உள்ளது. இது குறித்து அம்மாகாண கவர்னர் வலோரி லிமாரென்கோ கூறுகையில் மாஸ்கோ நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. 1980 ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

latest tamil news

முதற்கட்ட தகவலன்படி காஸ் கசிவு காரணமாக நடந்துள்ளது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. இச்சம்பவத்தில் 4குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகி உள்ளனர்.மேலும் 33 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.