கார் மீது அரசுப் பேருந்து மோதி கோர விபத்து… காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி.!

பரமக்குடி அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு விட்டு, ராமநாதபுரம் நோக்கி சோமசுந்தரம் என்பவர் குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அரியனேந்தல் என்ற இடத்தில் எதிர் திசையில் மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து காரின் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில், காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயங்களுடன் மேலும் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.