சென்னையில் நடக்கவுள்ள ‛ஸ்ரீ ஆண்டாள்' நடன நாடக நிகழ்ச்சி

வரும் சனிக்கிழமை (நவ.,26) மாலை 6 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமி மெயின் ஹாலில் ‛ஸ்ரீ ஆண்டாள்' என்னும் நடன நாடக நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் தயாரிப்பு மற்றும் இசையில், ஆண்டாள் வரதராஜன் எழுதிய பாடலை இளையராஜா, யுவன்சங்கர் ராஜா, பவதாரணி, நிவாஸ் உள்ளிட்டோர் பாடியுள்ளனர். இவர்களுடன் பி.எஸ்.பி.பி பள்ளி மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் சேர்ந்து பாடியுள்ளனர்.
நிகழ்ச்சி குறித்து கார்த்திக் ராஜா கூறுகையில், ‛ஆண்டாளின் கதையை அழகாக நடனத்தின் மூலம் வெளிப்படுத்த ஆசைப்பட்டோம். ரொம்ப நல்லா வந்திருக்கு' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.