புதுடெல்லி:
இருமுடியுடன் இனி ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சபரிமலை பக்தர்கள் அதிக அளவில் விமானத்தில் பயணம் செய்வதால் சென்னை – கொச்சி இடையே விமான சேவை அதிகரித்துள்ளது என்றும், இருமுடியுடன் இனி ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.