மதுரை மாவட்டத்தில் இருக்கின்ற திருப்பாலை பகுதியில் இருக்கும் மகளிர் மேல்நிலைப்பள்ளி வாகனத்தில் அப்பள்ளியில் படிக்கின்ற மாணவிகளை அழைத்து கொண்டு சென்றது.
அப்போது, கள்ளந்திரி பகுதிக்கு அருகில் போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதையறிந்த டிரைவர், அங்கு இருந்த சந்து பகுதிக்குள் பள்ளி வாகனத்தை அரை மணி நேரம் நிறுத்தி இருக்கின்றார்.
அப்பொழுது நீண்ட நேரம் பள்ளி வேனில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த காரணத்தால், உள்ளே இருந்த மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு நான்கு பேர் மயக்கமடைந்துள்ளனர்.
மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் நலமுடன் இருக்கின்றனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.