கல்லூரி பேருந்தில் Rugged Girl-க்கும் ஆசிரியைக்கும் நடந்த மோதல்! வைரலாகும் வீடியோ!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரி பேருந்தில் மாணவிக்கும் ஆசிரியருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.  கல்லூரியில் இருந்து வழக்கம் போல் மாணவர்களும் ஆசிரியர்களும் பேருந்துக்குள் ஏறி செல்லும் பொழுது மாணவி அருகில் ஆசிரியை ஒருவர் அமர்ந்திருக்கிறார். அப்பொழுது அந்த மாணவி நீங்கள் யார் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த ஆசிரியை இந்த கல்லூரியின் ஆசிரியர் என தெரிவித்திருக்கிறார். ஆசிரியை என்றால் கழுத்தில் ஐடி கார்டு அணியும் படி மாணவி ஆசிரியரிடம் தெரிவித்திருக்கிறார். 

நான் எதற்கு அணிய வேண்டும் என ஆசிரியை அந்த மாணவியிடம் கேட்டதற்கு, எங்களை மட்டும் அணிய சொல்கிறீர்கள் அல்லவா, நீங்கள் யார் என்று எங்களுக்கு எப்படி தெரியும் என  இரண்டு பேருக்கும் வாய் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்பொழுது வாடி போடி என இருவரும் பேசிக் கொள்ளவே அந்த ஆசிரியை மாணவியை கன்னத்தில் அறைந்து விடுகிறார் அந்த மாணவியும் பதிலுக்கு அடிக்க துணிகின்ற இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

இந்த விவகாரம் தொடர்பாக செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் எந்த விதமான புகார் அளிக்கப்படவில்லை, இருப்பினும் கல்லூரியின் நிர்வாகத்தில் தரப்பில் இரண்டு தரப்பின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.