'நோஸ்கட்' செய்த பாஜக மேலிடம்; கடுப்பான எடப்பாடி பழனிசாமி!

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மேலிடம் சார்பில் சிலர் சந்தித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவில், முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஒற்றைத் தலைமை உருவாகி உள்ளது. கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி, சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக, பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்

தேர்வு செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த

மற்றும் அவரது ஆதரவாளர்கள், அதே நாளில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதனால் அதிருப்தி அடைந்த

, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்துள்ளார். எனினும் இதுவரை நடைபெற்ற சட்டப் போராட்டங்களில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருக்கிறது. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில், டெல்லி பாஜக மேலிடமும் மவுனம் காத்து வருகிறது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் –

ஆகியோரை, பாஜக மேலிடத் தலைவர்கள் சமமாக பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில், அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என, பாஜக மேலிடம் விரும்புகிறது. இதற்கான பணிகளிலும் தமிழக பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணி –

அணி என இரண்டு அணிகளாக அதிமுக பிளவுபட்டு இருப்பதால், பாஜக மேலிடம் அப்செட் ஆகி உள்ளது. ஒருங்கிணைந்த அதிமுகவையே பாஜக விரும்பும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம், பாஜகவுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக இப்படி பிளவுபட்டு கிடந்தால், எதிர் வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், அது, திமுகவுக்கு சாதகமாக அமைந்து விடும் என்றும் பாஜக மேலிடம் எச்சரித்துள்ளது. ஆனால் எதையும் கண்டு கொள்ளும் மனநிலையில், எடப்பாடி பழனிசாமி இல்லை என்றேத் தெரிகிறது.

இந்நிலையில், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மேலிடம் சார்பில் சிலர் சந்தித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது அவர்களிடம், “எம்ஜிஆர் – ஜெயலலிதாவுக்கு வராத நெருக்கடியா… எது நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்..” என, எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதைக் கேட்டு ஷாக் ஆன பாஜக நிர்வாகிகள், ‘எம்ஜிஆர் – ஜெயலலிதா செல்வாக்கு மிக்க தலைவர்கள். அவர்கள் போல் நினைத்து முடிவெடுத்தால் உங்களுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கும்’ என மறைமுகமாக எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.