"காப்பகத்தில் இருக்க எங்களுக்கு விருப்பமில்லை"..சுவர் ஏறி குதித்து தப்பிச்சென்ற சிறுமிகள்!

ஈரோடு அருகே அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து கருமுட்டை விவகாரத்தில் தொடர்புடைய சிறுமி உள்பட 6 பேர் தப்பிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் இருந்து பவானி செல்லும் சாலையில் ஆர்.என் புதூர் என்ற இடத்தில் அரசு குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு சுமார் 50 பெண் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை துணி துவைப்பதற்காக சென்ற 7 சிறுமிகளில் 6 சிறுமிகள் சுவர் ஏறி குதித்து தப்பிச்சென்றுள்ளனர். இதுகுறித்து காப்பகத்தில் இருந்த மற்றவர்கள் அளித்த தகவலின் பேரில் காப்பக அதிகாரிகள் சிறிது நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த சிறுமிகளை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.
image
இதுகுறித்து சித்தோடு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், காப்பகத்தில் இருக்க விரும்பம் இல்லை எனவும் வீட்டிற்கு செல்வதற்காக வெளியேறியதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மீட்கப்பட்ட சிறுமிகள் மீண்டும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்படவுள்ளது.
imageSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.