அமீர் நடித்த படத்தின் தலைப்பு மாற்றம்

யோகி படத்தின் மூலம் இயக்குனராக அமீர் நடிகர் ஆனார். நேற்றுடன் அவர் நடிகராகி 13 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் நடிப்பில் பெரிதாக சாதிக்கவில்லை. இந்த நிலையில் அவர் தற்போது நடித்து வரும் படம் நாற்காலி. இந்த படத்தில் சாந்தினி, மாரிமுத்து, ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள். இதனை ஆதம் பாவா தயாரித்து, இயக்குகிறார். தேவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், வித்யா சாகர் இசை அமைக்கிறார்.

அரசியல் களம் கொண்ட இந்த படம் அரசியல்வாதிகள் நாற்காலிக்கு சண்டைபோடுவதை காமெடியாக காட்டப்போகிறது. இந்த நிலையில் படத்தின் தலைப்பை உயிர் தமிழுக்கு என்று மாற்றி உள்ளனர். அதோடு இந்த படத்தை மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி வாங்கி வெளியிடுகிறார்.

பேரன்பு கொண்ட பெரியோர்களே தாய்மார்களே என்ற டைட்டிலுடன் தொடங்கப்பட்ட இந்த படம் பின்னர் எம்ஜிஆர் பாண்டி என்று மாற்றம் செய்யப்பட்டது. அதற்கு பிறகே நாற்காலி ஆனது. தற்போது உயிர் தமிழுக்கு என்று மாறி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.