சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்றிருந்தார்.
அறுவை சிகிச்சை துறை கட்டடத்தில் லிப்டில் அவர் சென்றுகொண்டிருந்த போது பழுதாகி இயக்கம் தடைபட்டது. இதனால் லிப்டின் ஆபத்து கால கதவின் வழியாக அவரை அங்கிருந்த ஊழியர்கள் வெளியே அழைத்து வந்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.