பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை… ராபிடோ புக் செய்த பெண்ணை கூட்டு பலாத்காரம்..!!

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ராப்பிடோ வாகனத்தை புக் செய்தால் இரு சக்கர வாகனத்தில் வரும் நபர் புக் செய்த நபரை வாடகை இருசக்கர வாகனத்தில் குறைந்த வாடகையில் தேவையான இடத்தில் கொண்டு சென்று விட்டு விடுவார். ஆட்டோ கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களை விட இதில் குறைந்த வாடகை என்பதால் பலரும் இந்த செயலியை பயண்படுத்தி வருவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பெங்களூரில் கடந்த 25 ஆம் தேதி நள்ளிரவு 1 மணி அளவில் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் 22 வயதான பெண் ஒருவர் தனது தோழி வீட்டில் மது அருந்தியுள்ளார். அப்போது போதை அதிகமான நிலையில் தனது உடன் இருந்த தோழியின் பேச்சை கேட்காமல் வேறு ஒரு தோழியின் வீட்டிற்கு செல்ல முடிவு செய்த அவர் ராப்பிடோ இரு சக்கர வாடகை வாகனத்தை புக் செய்துள்ளார்.

நள்ளிரவில் மது அருந்திவிட்டு வாடகை இருசக்கர வாகனத்தை புக் செய்த பெண் சாலையில் வந்து நின்ற போது தான் புக் செய்த வாகனத்தில் ஏறி குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால் ஓட்டுநர் பெண்ணின் நிலையை நன்கு அறிந்து கொண்டு அவர் புக் செய்த இடத்திற்கு அழைத்து செல்லாமல் தனது காதலியுடன் தங்கி இருக்கும் அறைக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஒரு பெண்ணை அழைத்து வருவதாக ஏற்கனவே தனது நண்பனுக்கும் தகவல் கொடுத்திருந்த நிலையில் தனது அறையில் காதலியின் உதவியோடு ஓட்டுநர் மற்றும் அவரது நண்பன் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

26 ஆம் தேதி மதியம் பெண் தனது வீட்டில் கண் விழித்துப் பார்த்தபோது தன் உடல் முழுவதும் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தனது நண்பர்கள் உதவியுடன் காவல் துறையிடம் புகார் அளித்தார். காவல்துறை ராப்பிடோ வாகன ஓட்டுநர் மீது சந்தேகம் கொண்டு அவனது பின்புலத்தை விசாரித்த போது அவன் மீது பல்வேறு குற்றப்பின்னணி வழக்குகள் நிலுவையில் உள்ளதை கண்டு உடனடியாக அவனை காவலில் எடுத்து விசாரித்தனர்.

விசாரணையின் போது முதலில் அந்த பெண் மது அருந்திவிட்டு துணிகள் கிழிந்த நிலையில் வந்ததாகவும் அவர் குறிபிட்ட இடத்தில் அவரை இறங்கிவிட்டதாகவும் நாடகம் ஆடியுள்ளான். பின்பு காவல்துறை நடத்திய அதிரடி விசாரணையில் தனது காதலி உதவியுடன் தானும் தனது நண்பனும் இனைத்து வாடகைக்கு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டான். இதையடுத்து பீகார் மாநிலத்தை சேர்ந்த வாகன ஓட்டுநரான சகபுதீன் (வயது 22), பெங்களூரு ஹுலிமாவு பகுதியை சேர்ந்த அஸ்ரப் (வயது 23) மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த 22 வயது பெண் என மூன்று நபர்களையும் எலக்ட்ரானிக் சிட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.