தண்டவாளத்தில் பாறாங்கல் குமரியில் ரயிலை கவிழ்க்க சதியா?

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என நாகர்கோவில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே நேற்று முன் தினம் மாலை தண்டவாளத்தில் பாறாங்கல் இருந்தது. கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் சென்ற ரயிலில் மோதி இந்த பாறாங்கல் தெறித்தது. ரயில் இன்ஜின் டிரைவர் இதுபற்றி நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடைபெற்றதா? என்பது … Read more

நவ-06: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

திருப்பதியில் கைசிக துவாதசி உக்கிர சீனிவாச மூர்த்தி வீதியுலா

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகாலை கைசிக துவாதசியையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத உக்கிர சீனிவாச மூர்த்தி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியையொட்டி, நேற்று அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத உக்கிர சீனிவாச மூர்த்தி 4 மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி சுப்ரபாத சேவை, தோமாலை சேவைக்கு பிறகு சூரிய உதயத்துக்கு முன்பாக அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி … Read more

பொன்னியின் செல்வன் பாகம் 2 எப்போது வெளியீடு?

மணிரத்தினம். இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி என பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்து வெளியான பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன். உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது . இப்படம் தற்போது வரை ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதை அடுத்து இப்படம் பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ப்ரைம் தளத்தில் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி வெளியானது . தற்போது … Read more

மது போதையில் பாடம் எடுத்த தமிழ் ஆசிரியரை சஸ்பெண்ட் செய்த கல்வி அலுவலர்!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இளவரசன் என்பவர் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் காலையில் மது போதையில் வந்து பாடம் எடுக்காமல் தூங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல் மது போதையில் சரியாக பாடம் எடுக்காமல் மாணவ மாணவிகளை ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி மாணவர்கள் பெற்றோரிடம் கூறவே இந்த விவகாரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு எட்டியது.  இதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர் … Read more

நம்பியூர் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெட்டிச்செவியூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி. இவருடைய கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு மதியரசு (20) என்ற மகனும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர். இவரது மகன் மதியரசு கோபியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். லாவண்யா பெருந்துறையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் தாமதமாக சேர்ந்துள்ளார். செல்வி அந்த பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் … Read more

காவல் சீருடையில் கானா பாடல் பாடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட உதவி ஆய்வாளர்.!

காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சீருடையில் கானா பாடல் பாடி வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மறைந்த கானா பாடகர் பழனியின் பாடலை பாடி 2 இளைஞர்களோடு, காவல் சீருடையில் உதவி ஆய்வாளர் வீடியோ வெளியிட்டார். கானா சாங் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அந்த வீடியோ இணையதளத்தில் அதிகம் பகிரப்படுகிறது. Source link

செங்கல்பட்டு, தஞ்சை, நாகை உள்ளிட்ட18 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் இது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி வடமேற்கு திசையில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: … Read more

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் உ.பி. எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி கைது

லக்னோ: உத்தர பிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதியை சேர்ந்தவர் முக்தர் அன்சாரி (59). நிழல் உலக தாதாவாக அறியப்படும் அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து மாவ் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 5 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணானந்த் கொலை வழக்கு உட்பட சுமார் 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. கடந்த உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முக்தர் அன்சாரியின் மகன் அப்பாஸ் அன்சாரி (30), சுகல்தேவ் பாரதிய … Read more