பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் பயங்கர விபத்து… 2 பேர் பலி..!!

மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரில் நேற்று திடீரென்று பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பேருந்து பல வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், மாநகரப் பேருந்து கோஹல்பூர் காவல் நிலையப் பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, ​​திடீரென பாதையை விட்டு விலகி அருகில் இருந்த வாகனங்கள் மீது மோதியது. இதில், மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி, நிறுத்தப்பட்டது. சிவப்பு விளக்கு வெளிச்சத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது பேருந்து மோதியது. விபத்தின் போது, ​​இரு சக்கர வாகனமும் இழுத்துச் செல்லப்பட்டது என்றனர்.

இந்த விபத்து குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயம் அடைந்தவர்களையும், பேருந்து இருக்கையில் படுத்திருந்த ஓட்டுநரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாரடைப்பால் பேருந்து ஓட்டுநர் இறந்து விட்டதாக மருத்துவமனையில் மருத்துவர்கள் தெரிவித்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.