ஒன்றரை வயது மகளுக்கு பிறப்புறுப்பில் ரத்தம்.. தந்தையின் கேவலச்செயல்.! 

திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் கூலி வேலை செய்து வசித்து வரும் ராமராஜ் என்ற 31 வயது வாலிபருக்கு கடந்தாண்டு திருமணமாகி ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. 

இவர் மது போதை மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி போதையில் வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். சமீபத்தில் ஒரு நாள் தனது குழந்தைக்கு அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது குழந்தை அழத் துவங்கியது.

இதனால் சத்தம் கேட்டு எழுந்து வந்த தாய் பார்த்தபோது கணவர் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். குழந்தையின் பிறப்புறுப்பில் ரத்தம் இருந்த காரணத்தால் மருத்துவர்கள் உடனே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த அனைத்து மகளிர் காவல் துறையினர் குழந்தையின் தாய் தந்தையிடம் விசாரணை நடத்தி தந்தை காமராஜ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். ஒன்றரை வயது பச்சிளம் குழந்தைக்கு பெற்ற தந்தையே பாலியல் தொல்லை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.