மாமல்லபுரத்தை நெருங்கியது மாண்டஸ் புயலின் மையப்பகுதி – அடுத்த 2 மணி நேரம் மிக முக்கியம்

இன்னும் இரண்டு மணி நேரத்தில் மாண்டஸ்  புயல் முழுமையாக கரையைக் கடக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாண்டஸ் புயலின் மையப்பகுதி மாமல்லபுரத்திற்கு மிக அருகில் வந்துள்ளது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் மாண்டஸ் புயலின் மையப்பகுதி முழுமையாக கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னைக்கு தெற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது புயலின் மையப்பகுதி.

image
புயல் கரையை கடந்து வருவதால் சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காலை 8 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என சென்னை மேயர் பிரியா அறிவுறுத்தியுள்ளார்.

தவற விடாதீர்: சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் – சென்னை வானிலை ஆய்வு மையம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.