கடலூர் அருகே சோகம்.! கோவிலில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை.! போலீசார் விசாரணை

கடலூர் மாவட்டத்தில் கோவிலில் தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வ.உ.சி தெரு பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி பழனி(35). இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் பழனி கெடிலம் அருகே உள்ள கோவிலில் நேற்று திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சடைந்த நிலையில், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பழனி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பண்ருட்டி போலீசார் பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பழனி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.