டெல்லி: இடஒதுக்கீடு முறையை ரத்து செய்யக் கோரிய பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், பொதுநல மனுவை திரும்ப பெறாவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர். விளம்பர நோக்கில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், மனுவை திரும்ப பெற அனுமதியளித்து தள்ளுபடி செய்தனர்.
