மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 403 புள்ளிகள் அதிகரித்து 62.533 புள்ளிகளானது. வங்கிகள், ஐ.டி. நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்ததால் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 0.6 சதவீதம் உயர்ந்துள்ளன. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையாயின. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 111 புள்ளிகள் அதிகரித்து 18,608 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுபெற்றது.
