இந்தியாவில் இனிமேல் ஐபோன்களில் 5ஜி சேவை – ஆப்பிள் நிறுவனம்

இந்தியாவில் ஐபோன்களில் ஜியோ மற்றும் ஏர்டெல் நெட்வொர்க்கை பயன்படுத்துவோர், இனிமேல் 5ஜி சேவையை பயன்படுத்த இயலும் என, ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எஸ்இ 3வது தலைமுறை மாடல் மற்றும் ஐபோன் 12 மாடலுக்கு மேற்பட்ட அனைத்து மாடல் ஐபோன்களிலும், தங்களது ஐஓஎஸ்களை மேம்படுத்தி உள்ளதாக ஆப்பிள் தகவல் தெரிவித்துள்ளது.

மற்ற செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த அக்டோபர் மாதம் முதலே 5ஜி சேவையை அளித்து வரும் நிலையில், நவம்பர் மாதம் சோதனை அடிப்படையில் இச்சேவையை துவங்கிய ஆப்பிள் நிறுவனம், தற்போது மேம்படுத்தப்பட்ட ஐபோன்களில் புதிய ப்ரி பார்ம் ஆஃப், ஆப்பிள் மியூசிக் சிங்க் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.