அதிமுக பொதுக்குழு வழக்கு: ஜன.,4ம் தேதிக்கு ஒத்திவைப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், அதிமுக நிர்வாகி வைரமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின்போது பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுக்குழு செல்லும் என உத்தரவிட வேண்டும். வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். கட்சி செயல்பட முடியாத நிலை உள்ளதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிட்டார்.

latest tamil news

இந்த வழக்கு விசாரணை டிச.,12ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அன்றைய நாளில் அலுவல் நேரம் முடிவடைந்ததால் இன்று (டிச.,15) விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இன்றும் இந்த வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, ஜனவரி 4ம் தேதி மதியம் 2 மணிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.