தனியார் நிதி நிறுவனத்தில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை வைத்து 14 லட்ச ரூபாய் மோசடி – 2 பேர் கைது!

ராணிப்பேட்டை மாவட்டத்தில், தனியார் நிதி நிறுவனத்தில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை வைத்து 14 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

வாலாஜாபேட்டை பகுதியில் செயல்பட்டுவரும் அந்நிறுவனத்தில் நெடும்புலி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், அஜித் ஆகிய இருவரும் இரு மாத இடைவெளியில் 45 சவரன் தங்க முலாம் பூசப்பட்ட நகைகளை வைத்து ரொக்கமாக 14 லட்ச ரூபாய் பெற்று சென்றுள்ளனர்.

இந்நிலையில், நிறுவனத்தில் நகைககளின் தரத்தை பரிசோதித்தபோது போலி ஆபரணங்களை வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, கிளை மேலாளர் அன்பரசு அளித்த புகாரில், வாலாஜாபேட்டை பேருந்து நிலையம் அருகே வைத்து இருவரையும் மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.