இமாச்சலப் பிரதேச வெற்றியைக் கொண்டாட ராகுல் காந்தியின் நடைபயணத்தில் இணையும் 40 காங்.எம்.எல்.ஏக்கள்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடைந்துள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் வெற்றி பெற்ற 40 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ராகுல் காந்தியுடன் நடைப்பயணத்தில் இன்று இணைய உள்ளனர். 

ஜெய்ப்பூர் வந்த இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்வீந்தர் சுக்கு இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், 40 எம்.எல்.ஏக்களும் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்பதாகக் கூறினார்.

கட்சித் தலைமை தம் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ராகுலுக்கு ஆதரவாக பாதயாத்திரையில் பங்கேற்பதாக சுக்வீந்தர் தெரிவித்துள்ளார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.