"உலகமே பாகிஸ்தானை தீவிரவாதத்தின் மையமாகப் பார்க்கிறது!" – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், `சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு அணுகுமுறை – சவால்கள் மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழி’ என்ற தலைப்பில் இந்திய கவுன்சில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று கலந்துகொண்டார்.

அண்மையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஹினா ரப்பானி `இந்தியாவைவிட எந்த நாடும் தீவிரவாதத்தை சிறப்பாகப் பயன்படுத்தவில்லை’ என்று கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேட்கப்பட்டது.

இந்தியா – பாகிஸ்தான்

அது குறித்துப் பேசிய ஜெய்சங்கர், “அவர்கள் கூறுவதைப் பொறுத்தவரை உண்மை என்னவென்றால், உலகமே இன்று அவர்களை (பாகிஸ்தான்) தீவிரவாதத்தின் மையமாகப் பார்க்கிறது. இரண்டரை வருடங்கள் நாம் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பது எனக்குத் தெரியும். ஆனால், தீவிரவாதம் எங்கிருந்து வருகிறது என்பதை உலகம் மறந்திடவில்லை என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று கூறினார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

அதையடுத்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர், “புதுடெல்லி, காபூல், பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதம் பரவுவதை தெற்காசியா எவ்வளவு காலம் பார்க்கப் போகிறது” எனக் கேள்வியெழுப்பினார். அதற்கு, “தவறான அமைச்சரிடம் நீங்கள் கேட்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா… ஏனெனில் பாகிஸ்தான் எவ்வளவு காலம் தீவிரவாதத்தை நடைமுறைப்படுத்த விரும்புகிறது என்பதை பாகிஸ்தான் அமைச்சர்கள்தான் உங்களுக்கு கூறுவார்கள்” என ஜெய்சங்கர் பதிலளித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.