குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் ஆதார் எண் இணைப்பு: அதிகாரிகள் திணறல்!

கோவையில் குடும்ப அட்டைதாரா்களின் வங்கிக் கணக்கில் ஆதாா் எண் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் 33 ஆயிரம் பேரின் விவரங்களைப் பெற முடியாமல் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் திகைத்து வருகின்றனா்.

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்களின் வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைக்க அரசு சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவுத் துறை சாா்பில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவையில் 33 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்களின் விவரங்களைப் பெற முடியாமல் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனா்.

வங்கி கணக்குடன் ஆதாா் எண்ணை இணைக்காமல் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் ஆதாா் எண்ணை இணைத்து அதற்கான விவரங்களை நியாய விலைக் கடைகள் மூலம் சமா்ப்பிக்க கூட்டுறவுத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

இது குறித்து கோவை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் ராஜேந்திரன், “கோவை மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இவா்களில் 3,100 பேருக்கு மட்டும் வங்கிக் கணக்கு இல்லாமல் இருந்தது. அவா்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, ஆதாா் எண் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைக்காமல் இருந்தனா். இவா்களில் 53 ஆயிரத்து 922 பேரை தொடா்புகொண்டு தெரிவித்ததன் அடிப்படையில் ஆதாா் எண்ணை இணைக்க அதற்கான ஆதாரங்களை வழங்கியுள்ளனா்.

ஆனால், இறந்தவா்கள், தவறான முகவரி அளித்தவா்கள், வெளியூா் குடிபெயா்ந்தவா்கள் உள்பட 33 ஆயிரம் போ விவரங்களைப் பெற முடியவில்லை. இவா்களில் ஒரு சிலா் விவரங்களைத் தர மறுக்கின்றனா். அரசின் திட்டத்துக்காக கேட்கப்படும் தகவல்களை அனைவரும் தவறாமல் அளிக்க வேண்டும். எனவே, இதுவரை வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைக்காமல் உள்ள 33 ஆயிரம் பேரும் ஆதாா் எண்ணை இணைத்து அதன் விவரங்களை நியாய விலைக் கடை பணியாளா்களிடம் அளிக்க வேண்டும்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.