வாரிசை பெற்றெடுக்க இருக்கும் விஜய் பட இயக்குநர்!

தமிழ் திரையுலகின் நட்சத்திர இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அட்லீ.  ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய்யை வைத்து, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்தார். இதையடுத்து, முன்னணி இயக்குநர்களில் ஒருவராக பார்க்கப்பட்டார். 

தற்போது, பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து “ஜவான் ” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமான ஷாருக்கானை அவர் இயக்குவது அனைவருக்கும் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. 

இயக்கம் மட்டுமல்லாம் தனது மனைவி பிரியா அட்லீயுடன் இணைந்து ‘A for Apple Productions’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியான ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’, ‘அந்தகாரம்’ திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது. அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். 

இயக்குநர் அட்லீ, நடிகையான பிரியாவை கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது. 

இவர்கள் அனைவரின் விருப்பத்திற்குரிய ஜோடியாக வலம் வருகின்றனர். அவர்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகும் போது அதற்கும் லைக்ஸ் குவியும்.

தற்போது இந்த தம்பதி தங்களது வாழ்கையின் அடுத்தகட்டத்திற்கு செல்லவிருக்கின்றனர். இயக்குனர் அட்லீ மற்றும் பிரியா அட்லீ இருவரும் பெற்றோர்கள் ஆக போகிறார்கள் என்ற செய்தியை ரசிர்கர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளனர். தங்களுக்கு கொடுத்த இந்த அன்பையும் ஆதரவையும், ஆசீர்வாதத்தையும் தங்கள் குழந்தைக்கும் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் மக்களிடம் கேட்டு கொண்டுள்ளனர்.

“சந்தோசத்தின் குவியலை தரப்போகும் அழகிய மழலையின் தருணங்களை இவ்வுலகிற்கு கொண்டு வரபோவதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அந்த தருணத்தை காண நாங்கள் ஆவலாய் காத்து கொண்டு  இருக்கிறோம்” என அட்லீ மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.