அறநிலையத்துறை அலுவலர்களுக்கு புதிய வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர்

சென்னை தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 19 புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, 56 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் 13 கோவில்களில் இராஜகோபுரங்கள், மகா மண்டபம், திருமண மண்டபங்கள், அர்ச்சகர் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு, மலைப் பாதை சீரமைத்தல் உள்ளிட்ட புதிய திட்டப்பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, பொன்முடி உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.